சென்னை: கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், திரைக்கதை வசனகர்த்தாவும், திரைப்பட நடிகருமான கிரேசி மோகன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கிரேசி மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே நாடகங்களை எழுதத் தொடங்கினார். இவர், மாது மிரண்டால், சாட்டிலைட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது போன்ற பல நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, பல வெற்றிப் படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.