சென்னை: இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியது. ரம்ஜான் நோன்பு தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள். இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் காணப்படவில்லை. இதனால் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் அறிவித்திருந்தார்.