இந்நிலையில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 7ம் கட்டமாக இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதே போல் ஒடிசாவில் 41 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதி கட்டமாக நடக்கும் 57 தொகுதியில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10.02 கோடி பேர் இன்று வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1.09லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
6 கட்டங்களில் எவ்வளவு சதவீதம்?
முதல்கட்டம் 66.14
2வது கட்டம் 66.71
3வது கட்டம் 65.68
4வது கட்டம் 69.16
5வது கட்டம் 62.20
6வது கட்டம் 63.36
* எந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகள்?
பஞ்சாப் 13
இமாச்சல் 4
உத்தரபிரதேசம் 13
மேற்குவங்கம் 9
பீகார் 8
ஒடிசா 6
ஜார்க்கண்ட் 3
சண்டிகார் 1
* மோடிக்கு எதிராக யார், யார்?
பிரதமர் மோடி உபி மாநிலம் வாரணாசியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார். மோடிக்கு எதிராக அஜய் ராய் (காங்கிரஸ்), அதர் ஜமால் லாரி (பிஎஸ்பி), கோலிசெட்டி சிவ குமார் (யுக துளசி கட்சி), ககன் பிரகாஷ் யாதவ், (அப்னா தளம், காமராவதி), மற்றும் சுயேச்சைகள் தினேஷ் குமார் யாதவ், சஞ்சய் குமார் திவாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
* அருணாச்சல், சிக்கிம் சட்டப்பேரவைக்கு நாளை ஓட்டு எண்ணிக்கை
மக்களவை தேர்தலுடன் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்த அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிமில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அருணாச்சல் பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதில், பாஜ 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 34 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜ வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் கடந்த ஏப். 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், சோரெங்-சாகுங், ரெனோக் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதால், அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். அதனால் ஜூன் 4ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக வரும் நாளையே அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படும். இங்குள்ள மக்களவை தேர்தல் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். அருணாச்சலில் நாளை காலை 6 மணிக்கு வாக்குஎண்ணிக்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று கடைசிக்கட்ட தேர்தல்: மாலை 6.30 மணிக்கு பிறகு கருத்துக்கணிப்புகள் வெளியாகும் appeared first on Dinakaran.