சென்னை: தென்சென்னை பகுதியில் பட்டா கேட்டு போராடும் குடிசைவாசிகளுக்கு பட்டா பெற்று தருவேன் என்று இசக்கி சுப்பையா வாக்குறுதி அளித்தார். தென்சென்னை தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பல்வேறு வாக்குறுதிகளுடன் பொதுமக்களை வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். மக்களோடு மக்களாக நின்று குறைகளை கேட்டு, அதை தீர்த்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று உறுதி அளித்து வருவதால் அவர் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள இசக்கி சுப்பையா நேற்று சாலிகிராமம், விருகம்பாக்கம், பசவபுரம், மஜீத் நகர், பொன்னியம்மன் கோயில் உட்பட 129வது வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், பகுதி செயலாளர் பொன்னி தர்மராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் பொன் பாஸ்கர், அம்மா பேரவை பகுதி செயலாளர் குணசீலன், பகுதி துணை செயலாளர் கோகுல கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் அவருடன் சென்று பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.