சென்னை; கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் பழனிசாமி, கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த உணவுக்கான கட்டிட நல வாரியம் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் சென்னை மாநகராட்சிக்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியம் இடையே போடப்பட்டிருந்தது.