சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலைக்கு நேற்று பொங்கல் பரிசு வழங்க சென்ற அதிமுக எம்.பி., செல்லக்குமார சின்னையாவை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோட்டில் ₹35 லட்சம் செலவில் ஓலக்காட்டுப்பதி என்னும் இடத்தில் இருந்து எல்.பி.பி உபரி நீர், குழாய் மூலம் முருங்கத்தொழுவு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இத்திட்டம் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் துவங்கியது. மேலும் இப்பகுதியில் இருந்து ₹10 லட்சம் செலவில் குழாய் நீட்டிப்பு செய்து காளிக்கா வலசு மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர டெண்டர் விடப்பட்டுள்ளது.