இதை தொடர்ந்து, தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30ம் தேதி வரை அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடந்தது. இதில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கலந்துகொண்டனர். நேற்றைய தினம் முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் தொடங்கியது. வருகிற 15ம் தேதியுடன் முதற்கட்ட கலந்தாய்வு முடிவடையும். அதன் பின்னர் 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம் appeared first on Dinakaran.