இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த காமராஜ், தனது அறையில் ஏசியை ஆன் செய்து விட்டு தூங்கியுள்ளார். வேலைக்கு சென்றிருந்த பேரன் வினோத்குமார் நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, காமராஜ் தங்கியிருந்த அறையில் இருந்து கரும்புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், மின்சாரத்தை துண்டித்து விட்டு அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஏசி தீப்பிடித்து எரிந்து, மெத்தை மீது விழுந்து தீப்பிடித்ததில், காமராஜ் தீயில் கருகி சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டில் தூங்கும்போது ஏசி தீப்பிடித்து எரிந்து தொழிலாளி கருகி பலி appeared first on Dinakaran.