இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்த போது, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், துறைகளின் மொழிபெயர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் சாதாரண விஷயமல்ல. பல விவாதங்கள் இது சம்பந்தமாக நடந்து வருகிறது என்று குறிப்பிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
The post ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து ஆய்வு நடத்திய குழு பரிந்துரைக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.