தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரிச்சட்டத்தில்(ஜிஎஸ்டி) திருத்தம் செய்ய சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் மாநில அரசால் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் மாநிலத்திற்குள்ளான வழங்குதலின் பேரில் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்குமான வகைமுறை செய்வதன் பொருட்டு இயற்றப்பட்டது. புதிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறைக்கு தற்போதுள்ள வரி செலுத்துவோர்களின் எளிதான நடவடிக்கைக்காக ஒரு சில வகைமுறைகளை தமிழ்நாடு சட்டம் வழங்கியுள்ளது. எனினும், புதிய வரி முறையானது ஒரு சில இடர்பாடுகளை சந்தித்துள்ளது. வரி செலுத்துவோர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அசவுகரியங்களில் ஒன்று.