சென்னை: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பாஜ நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் தேர்தலில் வெற்றி பெற பாஜவினர் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார். இந்தநிலையில் நேற்று தென்சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட வாக்குசாவடி நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சில் கலந்து ஆலோசனை செய்தார். அதில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தராஜன், இல கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.