திருவனந்தபுரம்: கேரளாவில் கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது, இதில், 3 வாலிபர்கள் உயிர் தப்பினர். புதிய இடங்களில் வழி தெரியாமல் பயணம் செய்பவர்கள், கூகுள் மேப்பை பயன்படுத்தி செல்கின்றனர். சில நேரங்களில் கூகுள் மேப்பில் தவறான பாதைகளும் காட்டப்படுவது நடக்கிறது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் வடக்கான்சேரி பகுதியை சேர்ந்த கோகுல்தாஸ் (23), இசகாக் (29), முஸ்தபா (36) ஆகியோர் நேற்று முன்தினம் அதிகாலை மூணாறுக்கு காரில் சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் கூகுள் மேப்பை பார்த்தபடி பயணித்தனர்.