மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவலி தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 1.40 மணியளவில் பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தொழிலாளிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார், தீயணைப்புபடை மற்றும் பேரிடர் மேலாண்மை படையினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 43 தொழிலாளர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தின் போது ஏற்பட்ட தீ அருகிலுள்ள மேலும் 3 தொழிற்சாலைகளுக்கு பரவியது. இதன் காரணமாக, தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கரும்புகை சூழ்ந்தது.
The post மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.