புழல்: சென்னை புழல் ஏரி மதகில் இருந்து சாமியார் மடம், தண்டல் கழனி, காவாங்கரை கண்ணப்பசாமி நகர், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் புழல் வரை சுமார் 2 கி.மீ. தூரம் வரை ஏரிக்கரை செல்கிறது. இந்த கரைகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு விளக்குகள் எரிந்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகள் பைக்குகளில் வந்து ஏரிக்கரையில் பொழுது கழித்தனர். மேலும் பலர் மது வாங்கி வைத்து கரையில் உள்ள சுவர்கள் மீது அமர்ந்து குடித்துவந்தனர். ஒரு சில ஜோடிகள், அத்து மீறல்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரிக்கரையில் நடைபயிற்சி செல்பவர்கள் இந்த காட்சியை பார்த்து வேதனை பட்டனர். ஏரியை சுற்றிப்பார்க்க வருகின்றவர்களும் காதலர்களின் செய்கையை பார்த்து முகம் சுளித்தனர். இதுதவிர குடிகாரர்கள் தொல்லையும் அதிகரித்தது.