சென்னை : சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார். கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசுக்கு நந்தினி கண்டனம் தெரிவித்தார். மாணவி நந்தினியின் தந்தை ஆனந்தனையும் போலீஸ் கைது செய்தது. சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி வந்த நந்தினியை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தது.