டெல்லி :சிபிஐ சிறப்பு இயக்குனர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ராகேஷ் அஸ்தானா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அஸ்தானா, இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சதீஷ் சனாவை சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.இதனால் அவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.