சென்னை: மனைவியுடன் ஜாலியாக சினிமா பார்த்து ெகாண்டிருந்த காதலனுடன் கணவன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் மயிலாப்பூர் தியேட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையை சேர்ந்தவர் பூர்ணிமா (32). இன்ஜினியர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய, இன்ஜினியர் மித்திரன் (34) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதன்பிறகு இருவரும் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு பாரதி (6), கவிதா (3) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பூர்ணிமாவுக்கு தன்னுடன் வேலை செய்யும் சாரங்கன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவர் மித்திரன் மனைவியிடம் கேட்டுள்ளார். இதுபெரிய சண்டையாக வெடிக்கவே, தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கணவரிடமே விட்டுவிட்டு கடந்த ஓராண்டுக்கு முன் பூர்ணிமா காதலன் சாரங்கனிடம் செட்டிலாகிவிட்டார். இரண்டு குழந்தைகள் இருப்பதையே மறந்தும்விட்டார். நேற்று முன்தினம் மித்திரன் தனது இரண்டு குழந்தைகளுடன் மயிலாப்பூர் வணிக வளாகத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். அந்த தியேட்டரில் பூர்ணிமாவும் அவரது காதலன் சாரங்கனும் படம் பார்க்க வந்துள்ளனர். அப்போது, பூர்ணிமாவும், சாரங்கனும் தலைகளை உரசியபடி சினிமா பார்த்துள்ளனர்.