மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா!: தஞ்சையில் மேலும் 17 பேருக்கு தொற்று உறுதி..மக்கள் அச்சம்..!!

தஞ்சை: தஞ்சையில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதிப்பு தொடர்வதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா 2ம் அலை என்பது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை மாணவ, மாணவியருக்கு மிக தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே தஞ்சையில் 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாரியம்மன் வீதி அரசு பள்ளியில் 2 பேர், அன்னை கல்லூரி மாணவர்கள் 5 பேர், கும்பகோணத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 10 மாணவிகள் என மொத்தம் 17 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கையை மேற்கொண்டாலும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான  நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 183 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனை தவிர்த்து ஆசிரியர்கள் 7 பேர், பெற்றோர்கள் 6 பேர் என அடுத்தடுத்து தொற்றானது பரவி வருகிறது. தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகக்குழு அதிகாரிகளும் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் கொரோனா பாதித்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் தஞ்சை மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். …

The post மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா!: தஞ்சையில் மேலும் 17 பேருக்கு தொற்று உறுதி..மக்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Related Stories: