உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு..!!

உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு நகரமான மைகோலேவ் பகுதியில் உள்ள பிராந்திய அரசு கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெரிய துளையுடன் அந்த கட்டடம் சிதைந்தது. புகையுடன் பற்றி எரியும் தீயின் நடுவே மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

The post உக்ரைனில் அரசு கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: