தேர்தல் திருவிழாவையொட்டி கர்நாடகா மாநிலம் ஷிமோகா தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்று அரண்மனை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களும் அரண்மனை பணியாளர்கள் போல ஆடை ஆபரணங்கள் அணிந்து பணியாற்றியது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. வாக்களித்த பின் கிரீடம் தரித்து சிம்மாசனத்தில் அமர்ந்து செல்பி எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்போர் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறது.
The post தேர்தல் திருவிழாவில் ருசிகரம்!: அரண்மனை போல வடிவமைக்கப்பட்ட வாக்குச்சாவடி..அரண்மனை வாசிகளாக மாறிய தேர்தல் அலுவலர்கள்..!! appeared first on Dinakaran.