தமிழகம் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் Jul 25, 2021 டாலி இரனிபெட் தளி Nemili Ranipetta ராணிப்பேட்டை: நெமிலியில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளிடம் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் வாங்க ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் சரஸ்வதி, பயனாளிகள் ஒவ்வொருவரிடம் ₹1000 லஞ்சமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ₹25 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ₹50 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஒன்றியங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பித்தனர். அப்போது அவர்களிடம் சுமார் ₹4 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. … The post தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் appeared first on Dinakaran.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகிறது: பேரவையில் மசோதா தாக்கல்
தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவையில் புள்ளி விபரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: திருமுடிவாக்கத்தில் குறுந்தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
பள்ளி மாணவிகளை பாலியில் தொழிலில் தள்ளிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு