இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை: கிரித்தி ஷெட்டி

சென்னை: பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், கிரித்தி ஷெட்டி. தெலுங்கில் லிங்​கு​சாமி இயக்​கத்தில் உருவான ‘தி வாரியர்’, வெங்​கட்​ பிரபு​ இயக்கத்தில் உருவான ‘கஸ்​டடி’ ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டபோது, அதன்மூலம் தமிழுக்கு வந்த கிரித்தி ஷெட்​டி, தற்போது தமிழில் நேரடியாக கார்த்​தி​யுடன் ‘வா வாத்​தி​யார்’, ரவி ேமாகனுடன் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ ஆகிய படங்​களில் நடித்துள்ளார். அவர் ‘சூப்​பர் 30’ என்ற இந்தி படத்​தில் சின்ன கேரக்டரில் நடித்​ததன் மூலம் திரைத்துறையில் அறி​முக​மானார். இந்நிலையில், மீண்டும் அவர் இந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்​கத்​தில் டைகர் ஷெராஃப்புடன் ஒரு இந்தி படத்தில் நடிப்​ப​தாகவும் கூறப்​பட்​டது.

இதுபற்றி கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘மும்​பை​யில் பிறந்து வளர்ந்தவள் என்​ப​தால், இந்​தி​யில் நடிப்​பது எனக்கு வசதியாகவும், சிறப்பாகவும் இருக்​கும் என்று நினைத்தேன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் போல், இந்தியில் பேச கற்றுக் கொண்டு நடிக்க வேண்​டிய​ கட்டாயம் எனக்கு இல்லை. ஏனெனில், எனக்கு இந்தி தெரி​யும் என்​ப​தால், ஷூட்டிங்கில் நான் பேச வேண்டிய வசனங்​களின் அர்த்​தம் நன்கு புரியும். கடந்த ஆண்டு இந்​தி​யில் எனக்கு சில பட வாய்ப்பு​கள் வந்தது. ஆனால், கால்​ஷீட் பிரச்​னை காரண​மாக நான் நடிக்கவில்​லை. பாலிவுட்டில் பணியாற்றும் முறை மிகவும் வித்​தி​யாச​மானது. அவர்​கள் அனைத்து படப்​பிடிப்பு ஷெட்​யூலையும் ஒன்​றாகவே திட்டமிடுவார்​கள். தென்​னிந்​திய சினி​மா​வில் பிரித்து, பிரித்து நடத்​து​வார்​கள். இதனால், இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்கவில்லை.

Related Stories: