ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜெயம் ரவி படம்

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அகிலன்’. சாம்.சி.எஸ் இசையமைத்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் பார்வையாளர்களை பெரிதும் கவராத நிலையில், அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’, ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ உள்ளிட்ட படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ளன.

இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து உருவாகும் ஜெயம் ரவியின் 32வது படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். மற்றும் நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: