சென்னை: ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம், ‘பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் சார்பில், கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் நான் அழ மாட்டேன். நிறைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டோம். இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ‘பத்து தல’ ஷூட்டிங் நடந்த போது ஏகப்பட்ட பிரச்னைகள். இப்படமே டிராப் ஆகிவிடும் நிலையில், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் பேசி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினோம். இப்படம் எனக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, கவுதம் கார்த்திக்கிற்காக வெற்றிபெற்றே ஆக வேண்டும். கன்னட ‘முஃப்தி’ படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்திருந்தார். அவரது கேரக்டரில் என்னால் நடிக்க முடியுமா என்று தயங்கி னேன். அதையும் தாண்டி நான் நடித்ததற்குக் காரணம், எனது தம்பி கவுதம் கார்த்திக். படத்தில் எனக்கு துணை இல்லை.