மும்பை: ‘இந்திய பெண்கள் சோம்பேறி கள்’ என்று பேசிய நடிகை சோனாலி குல்கர்னி, அப்பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார். பாலிவுட் நடிகையும், தமிழில் ரிலீசான ‘மே மாதம்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவருமான சோனாலி குல்கர்னி, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ேபசும்போது, ‘இந்திய பெண்கள் சோம்பேறி கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக, தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக காதலன் அல்லது கணவனை தேடுகிறார்கள்’ என்றார். இதையடுத்து அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.