புதிய அணுகுமுறைக்கு ஆதரவளித்தற்கு நன்றி: புஷ்பா இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற என் சாமி, ஓ சொல்றியா மாமா, ஸ்ரீவள்ளி பாடல்கள் உலகமெங்கும் பரவி புகழ்பெற்றது. இது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “புஷ்பா – தி ரைஸ் என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில் இசையில்  எனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக சுகுமார் சார், ஐகான்ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நடிகர்களின் மாயாஜால திரை ஆளுமை எல்லாம் தான் இந்த  வெற்றிக்கு ஆதாரமாக அமைந்தது. எனது இசைக்காக  அன்பையும் ஆசீர்வாதத்தையும் என் மீது பொழிந்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி, எனது வாழ்க்கை முழுவதும் உங்களிடமிருந்து இதே அளவு ஆதரவைப் பெறுவேன் என்று நம்புகிறேன் என்றார்.

Related Stories: