புதுடெல்லி: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி, கடந்த வாரம் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்காக மும்பை விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது தனது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, மகள் வாமிகா ஆகியோரை அழைத்துச் சென்றார். அப்போது பத்திரிகை போட்டோகிராபர் ஒருவர், வாமிகாவை போட்டோ எடுத்தார். ஆனால், அந்த போட்டோவை இதுவரை அவர் வெளியிடவில்லை. இதுகுறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் மகளின் போட்டோ மற்றும் வீடியோவை இதுவரை வெளியிடாத அந்த பத்திரிகையாளருக்கும், ஊடகங்களுக்கும் மிகவும் நன்றி.