தாய்லாந்து காடுகளில் படமான காடன்

ஒரே நேரத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழில் காடன், தெலுங்கில் அரண்யா, இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயர்களில் படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் இப்படங்கள் குறித்து பிரபு சாலமன் கூறியதாவது: தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் ராணா, விஷ்ணு விஷால், இந்தி பதிப்பில் ராணா, புல்கிட் சாம்ராட் நடித்துள்ளனர்.

3 படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம் இது. அசாம் காசிரங்காவில் யானைகளின் தாழ்வாரங்களை மனிதர்கள் ஆக்கிரமித்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதியுள்ளேன்.

இயற்கை வளத்துக்கு எதிரான மனிதர்களிடம் இருந்து காட்டையும், விலங்குகளையும் மீட்டெடுக்க போராடும் வீரபாரதி கேரக்டரில் ராணா நடித்துள்ளார். அசாம் மற்றும் தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அசோக்குமாரின் ஒளிப்பதிவு, ஷாந்தனு மோய்த்ராவின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, பிராணா ஸ்டுடியோவின் விஎப்எக்ஸ் காட்சிகள் வேறு லெவலில் இருக்கும்.

Related Stories: