ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்ததுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பாக்ஸர் உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழில் பிரபலமாக இருக்கும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. சமீபத்தில் பெங்களூரில் திரைப்படம் ஒன்றிற்கு சென்ற சஞ்சனா, கார் ஓட்டிக்கொண்டே செல்போனை கொண்டு செல்பி வீடியோ எடுத்து அதில் தற்போது மகேஷ்பாபு படம் பார்க்கச் சென்றுக்கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டு நெட்டில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. சஞ்சனாவின் இந்த குறும்புத்தனமும். ஆர்வக்கோளாறும் போலீஸ் கண்ணில்பட்டது. உடனடியாக சஞ்சனா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.