வந்தியத்தேவன் ஆகிறார் கார்த்தி

‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்டநாள் கனவு. கமல்ஹாசனுக்கும் இந்த கனவு உண்டு. இதில் மணிரத்னம் தற்போது முந்திக்கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

முக்கிய வேடங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு ஆகியோர்கள் நடிக்க இருப்பதாகவும், பொன்னியின் செல்வன் நாவலின் பிரதான கதாபாத்திரமான வந்தியத்தேவன் வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. வீரம், காதல், காமெடி மற்றும் தந்திரம் ஆகியவை கலந்து அமரர் கல்கி இப்பாத்திரத்தை அமைத்திருப்பார். டைட்டில் கதாபாத்திரமான பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் நடிப்பது யார்? என்பது குறித்த தகவலும் விரைவில் வெளிவரவுள்ளதாம்.

Related Stories: