சினிமா ஆசை கொண்ட மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மிகக்குறைந்த கட்டணத்தில், மாணவர்களுக்கு திரைத்துறை பயிற்சி வழங்கப்படவுள்ளது. திரைத்துறை தொடர்பான கருத்தரங்கம், நூலகம், பயிற்சிப்பட்டறை, விவாத அரங்கம் முதலான அனைத்தும் இந்த பட்டறையில் நடத்தப்படவுள்ளது. இயக்குநர் யார் கண்ணன் அவர்களின் கனவுப்பட்டறையாக துவக்கப்பட்டுள்ள இந்த அகாடமியின் துவக்க விழா, நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கம் தலைவர், முனைவர் வி. முத்து தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக உச்சநீதி மன்ற வழக்கறிஞர் வேலஸ்ரீ, நக்கீரர் தமிழ்ச் சங்கம் தலைவர் இரா.பாஸ்கரன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, எடிட்டர் லெனின், இயக்குநர் செல்வமணி, நடிகர் மோகன், நடிகை தேவயானி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடலாசிரியர் சினேகன், நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.