பல வருட இடைவெளிக்கு பிறகு ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தை அவர் எழுதி இயக்கினார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அவர், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதில், முதன்மை வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். அருண்குமார் சம்பந்தம், என்.சங்கர் தயாள் தயாரித்துள்ளனர். ஜே.லஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, ‘சாதகப் பறவைகள்’ சங்கர் இசை அமைத்துள்ளார்.
