சுற்றுலா வேன்களில் இருக்கை அதிகரிப்பு குறித்த அறிக்கை

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் இணை போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் வீல் பேஸ் அடிப்படையில் 19+1, டெம்போ டிராவலர்களுக்கு 14+1 என்னும் வகையில் இருக்கை எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி வழங்க வேண்டும். அதற்கேற்ப இருக்கை வரியையும் செலுத்த தயாராக இருப்பதாக சுற்றுலா வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். எனவே அண்டை மாநிலங்களில் சுற்றுலா வேன்களுக்கு வசூலிக்கப்படும் இருக்கை வரி, ஆயுள் வரி மற்றும் வரிவிதிப்பு தொடர்பான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது….

The post சுற்றுலா வேன்களில் இருக்கை அதிகரிப்பு குறித்த அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: