கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஈஸ்வரன் கோயில் புதிய தேர் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பர ஈஸ்வரர், காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் (இரட்டை சிவாலயம்) கோயிலில் உபயதாரர்களால் செய்யப்பட்ட புதிய தேர் பிரகாரம் வருதல், உற்சவர் கும்பாபிஷேகம் ஆகியவை நேற்று நடந்தது.