கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூரில் ஈஸ்வரன் கோயில் புதிய தேர் கும்பாபிஷேகம்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஈஸ்வரன் கோயில் புதிய தேர் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பர ஈஸ்வரர், காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் (இரட்டை சிவாலயம்) கோயிலில் உபயதாரர்களால் செய்யப்பட்ட புதிய தேர் பிரகாரம் வருதல், உற்சவர் கும்பாபிஷேகம் ஆகியவை நேற்று நடந்தது.

இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர், தேருக்கு கும்பாபிஷேகமும், பிரகாரத்தை வலம் வருதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 20ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: