அன்னியாளம் வரதராய சுவாமி கோயில் தேரோட்ட விழா

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் கிராமத்தில் உள்ள வரதராய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்ட விழா நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராய சுவாமி உற்சவ மூர்த்திகளை அமர்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டவாறு தேர்வடம் பிடித்து கோயிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். விழாவில் அன்னியாளம், வரதரெட்டிபாளையம், கக்கதாசம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: