திருப்பதி லட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்டார் கார்த்தி

சென்னை: திருப்பதி லட்டு கலப்படம் விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் கார்த்தி. திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள். அதில் ‘சிறுத்தை’ படத்தில் தமன்னாவிடம் ‘ஒரு லட்டு வேணுமா, ரெண்டு லட்டு வேணுமா’ என கார்த்தி கேட்கும் வசனத்தையும் மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். இந்நிலையில் மெய்யழகன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது கார்த்தியிடம் இந்த மீம்ஸ் பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

உடனே கார்த்தி, லட்டு விவகாரம் சர்ச்சையில் இருக்கிறது. இது பற்றி நாம் பேச வேண்டாம் என சிரித்தபடி பதில் கூறினார். இந்நிலையில் நேற்று மீடியாவிடம் பேசிய பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர்கள் இந்து தர்மத்தை மதித்து நடக்க வேண்டும் என சொன்னார். இதையடுத்து டிவிட்டரில் நான் வெங்கடாஜலபதியின் தீவிர பக்தன் என்றும் மீம்ஸ் விவகாரத்தில் யாராவது மனம் புண்பட்டிருந்தாலும் எனது கருத்து தவறாக புரியப்பட்டிருந்தாலும் மன்னிப்பு கேட்பதாகவும் கார்த்தி கூறியிருக்கிறார்.

The post திருப்பதி லட்டு விவகாரம்: மன்னிப்பு கேட்டார் கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: