அரியலூர்: அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் 21ம்தேதியும், ஏகாந்தசேவை 22ம்தேதி இரவும் நடைபெறுகிறது. அரியலூர் அருகே உளள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இக்கோயிலின் ஆண்டு திருவிழா ராமநவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு திருவிழா ராமநவமியான கொடியேற்றத்துடன் தொடங்கியது.