பூமிகா அக்காவா? ஜெயம் ரவியிடம் சண்டை போட்ட நண்பர்கள்

சென்னை: தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் ‘பிரதர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜெயம் ரவி பேசும்போது, ‘ஒரு முறை கூட அலுக்காத ஒரு முகம் பூமிகாவி முகம். நான் என் நண்பர்களிடம் பூமிகா மேடம் எனக்கு அக்காவாக நடிக்க போகிறார்கள் என்று சொன்னதும் அனைவரும் என்னுடன் சண்டை போட்டார்கள். யார் அக்கா? அவர்களை நீ எப்படி அக்காவாக நடிக்க வைக்க முடியும்? என்று கேட்டார்கள். அதே போல் தான் எம்.குமரன் படத்தில் நதியா மேடம் எனக்கு அம்மாவாக நடிக்கிறார்கள் என்றபோது பயங்கரமாக என்னை சத்தம் போட்டார்கள்’ என்றார். இயக்குனர் ராஜேஷ் பேசும்போது, ‘நானும் ரவியும் மூன்று கதை கலந்து ஆலோசித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு நாம் இந்த கதையை படமாக்கலாம் என்று கூறினார். எம் குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்று படங்கள் எடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோல் இந்த நேரத்தில் இந்த கதை நன்றாக இருக்கும் என்று கூறினார். அங்கிருந்துதான் இந்த படத்திற்கான பயணம் ஆரம்பித்தது’ என்றார்.

The post பூமிகா அக்காவா? ஜெயம் ரவியிடம் சண்டை போட்ட நண்பர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: