12த் பெயில் ரீமேக் உரிமையை வாங்கினார் சூர்யா

சென்னை: விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸே நடிப்பில் உருவான படம் ‘12த் பெயில்’. இந்த படம் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ₹50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை சூர்யா வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் ஒருவர் ம.பி கிராமத்திலிருந்து வந்து, ஐபிஎஸ் அதிகாரியாக மாறியது எப்படி என்ற கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் உரிமையை சூர்யா வாங்கி இருப்பதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனோஜ் குமார் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரியின் நிஜ வாழ்க்கை கதை இது. சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து வாடிவாசல், சுதா கொங்காரா படம் என பிஸியாக இருப்பதால் அவரது தயாரிப்பில் வேறு நடிகர் இந்த படத்தில் நடிப்பாராம். மேலும் இது இளம் ஹீரோ நடிக்க வேண்டிய கதை என்பதால், இதில் சூர்யா நடிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

The post 12த் பெயில் ரீமேக் உரிமையை வாங்கினார் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: