காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் அமைச்சரும், நடிகை யுமான ரோஜா, நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ரோஜா சாமி தரிசனம் செய்தார்.பின்னர் ரோஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம் கிடைத்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. முதல் படம் நடித்தது முதல் தற்போது வரை ஆண்டுதோறும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வருகிறேன். என்னுடைய வேண்டுதலை அம்பாள் நிறைவேற்றியுள்ளார். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பிரார்த்தனை செய்ய உள்ளேன். எந்த ஒரு காரியம் செய்தாலும் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்கிய பின்தான் தொடங்குவேன். தாய் வீடான ஆந்திர மக்களுக்கும், மாமியார் வீடான தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: