விருதுநகர் பெண் கூட்டு பலாத்கார வழக்கு கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் மற்றும் 4 சிறார்கள் என 8 பேர், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டனர். சிறார்கள் மதுரை கூர்நோக்கு இல்லத்திலும். மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  இவ்வழக்கில் ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார், கடந்த மாதம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். பின்னர் மீண்டும் கடந்த 4ம் தேதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த 4 சிறார்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மாடசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஜூனத் அகமது ஜாமீன் கோரி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி பரிந்துரையின்பேரில், ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்….

The post விருதுநகர் பெண் கூட்டு பலாத்கார வழக்கு கைதான 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: