தஞ்சை பள்ளி மாணவி வழக்கு விளக்க மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம்: விசாரணையை ஜூலைக்கு தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவிக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை முருகானந்தமும் கடந்த 4ம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் நீதிபதிகள் முன்னலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு, விளக்க மனு தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்….

The post தஞ்சை பள்ளி மாணவி வழக்கு விளக்க மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம்: விசாரணையை ஜூலைக்கு தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: