கட்டில் படத்தால் காப்பாற்றப்பட்ட வீடு

சென்னை: மேப்பிள் லீப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஈ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கட்டில்’. இதில் சிருஷ்டி டாங்கே, விதார்த், கன்னிகா சினேகன் நடித்துள்ளனர். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். திரைக்கதை எழுதி பி.லெனின் எடிட்டிங் செய்ய, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். வரும் நவம்பர் 24ம் ேததி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஈ.வி.கணேஷ் பாபு கூறியதாவது: ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பது கதை. ‘கட்டில்’ படத்தைப் பற்றி கேள்விப்பட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் என்னை அணுகினர்.

நாங்கள் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகிறோம். மயிலாப்பூரில் இருக்கும் எங்கள் வீட்டை விற்க முடிவு செய்தோம். அதற்கு முன்பு உங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களுக்கு சிறப்புத்திரையிடலாக இப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு அவர்கள் கண்கலங்கி, அந்த வீட்டை விற்கும் திட்டத்தையே கைவிட்டனர். ‘பரம்பரையான வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல, அது ஒரு கோயில்’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள். அதைக்கேட்டு எனக்குப் பெருமையாக இருந்தது.

The post கட்டில் படத்தால் காப்பாற்றப்பட்ட வீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: