இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பயணம் ஆன்மாவின் அழைப்பு. பாபாஜி குகைக்குச் செல்ல தெய்வீக அழைப்பு வந்தது. சிறிதும் யோசிக்காமல் சென்றேன். இது கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. ஆனால், நல்ல விஷயங்கள் எளிதில் கிடைத்துவிடாது. பாபாஜி குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்காரும்போது அது ஆழமாக என்னைத் தொட்டது. என் வாழ்நாளில் இதற்கு முன் இதுபோன்ற தெய்வீக அனுபவத்தை அனுபவித்ததில்லை. இதற்குப் பிறகு வாழ்க்கை குறித்த முழு பார்வையும் மாறிவிட்டது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இதை அனுபவிக்கத் தகுதியானவர்கள். இவ்வாறு ஆத்மிகா கூறியுள்ளார்.
The post பாபாஜி குகையில் ஆத்மிகா தியானம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.