மல்யுத்த வீரரை சந்தித்த கார்த்தி

ஐதராபாத்: நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. உலக மல்யுத்தப் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் சூப்பர் ஸ்டார் ஸ்பெக்கடல் என்ற பெயரில் மல்யுத்தப் போட்டி நடக்கிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் WWE போட்டி.

இதில் மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா கலந்துகொண்டார். அப்போது ஜான் சீனாவை சந்தித்த கார்த்தி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதுதான் தற்போது வைரலாகி வருகிறது. அதனை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ஜான் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி என கார்த்தி பதிவு செய்துள்ளார். இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கான இந்திய விளம்பரத் தூதராக கார்த்தி உள்ளார்.

The post மல்யுத்த வீரரை சந்தித்த கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: