இரண்டு மாதங்கள் தூக்கம் இல்லாமல் உழைத்தேன்: எம்.எம்.கீரவாணி

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம் ‘சந்திரமுகி 2’. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். பி.வாசு இயக்கும் 65வது படமான இதில் கங்கனா ரனவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவிமரியா, சுரேஷ் மேனன், சுபிக்‌ஷா கிருஷ்ணன் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்துக்கு ரீ-ரெக்கார்டிங் செய்தது குறித்து எம்.எம்.கீரவாணி கூறுகையில், ‘ஆக்‌ஷன் வித் ஹாரர் கதை கொண்ட ‘சந்திரமுகி 2’ பார்த்தேன்.

இதில் வரும் கேரக்டர்கள் மரண பயத்தால் தூக்கம் வராமல் இரவு நேரத்தைக் கழிக்கின்றனர். இக்காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைத்தேன். குரு கிரண், எனது நண்பர் வித்யாசாகர் இருவரும் என்னை வாழ்த்த வேண்டும்’ என்றார். இசை அமைப்பாளர்கள் குரு கிரண், வித்யாசாகர் இருவரும் ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்துக்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்புக்கு இசை அமைத்தது குறிப்பிடத்தக்கது. ‘சந்திரமுகி 2’ படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வருகிறது.

The post இரண்டு மாதங்கள் தூக்கம் இல்லாமல் உழைத்தேன்: எம்.எம்.கீரவாணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: