இந்த யாத்திரையில் அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி மற்றும் பனிப்பொழிவில் ஏற்பட்ட சறுக்கல்கள் இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு, சர்வ வல்லமையுள்ள இறைவனிடம், ‘நீங்கள் ஏன் இவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள்’ என்று கேட்கத் தோன்றியது. அப்போது நான் கண்ட காட்சி, மலையேறி வருபவர்கள் அதிக களைப்பை உணரும்போதும், இனிமேல் இ்ங்கு மலையேறவே முடியாது என்று நினைக்கும்போதும், ‘ஓம் நமச்சிவாய’ என்று கோஷம் எழுப்புகின்றனர். உடனடியாக அவர்கள் யாத்திரையை தொடங்குகின்றனர். இந்த அமர்நாத் யாத்திரை மன உறுதியைச் சோதித்தது. எனது உடலைச் சோதித்து, இந்த வாழ்க்கையே ஒரு புனிதமான பயணம் என்பதை எனக்கு நிரூபித்தது என்பதே உண்மை.
The post வாழ்க்கை ஒரு புனிதமான பயணம்: சாய் பல்லவி தத்துவம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.