படத்தின் வெற்றி விழாவிலிருந்து வெளியேறிய ஹீரோ: படக்குழு அதிர்ச்சி

ஐதராபாத்: கடந்த வெள்ளிக்கிழமை ‘ரங்கபாலி’ என்ற தெலுங்கு படம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நாக சவுர்யா நடித்தார். இவர், தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ என்ற படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்தவர். நாக சவுர்யா மீது பலமுறை புகார்கள் எழுந்துள்ளன. படப்பிடிப்புக்கு நேரத்துக்கு வருவதில்லை. தெனாவட்டாக நடந்து கொள்வார். இயக்குனர்களின் பேச்சை கேட்பதில்லை என்றெல்லாம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. பட ஹீரோயின்களுடன் அடிக்கடி சண்டை போடும் பழக்கமும் இவருக்கு உண்டு. இவர் சமீபத்தில் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் ரங்கபாலி படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. ஆனாலும் படக்குழுவினர் இந்த படம் வெற்றி என்று சக்சஸ் மீட்டை சமீபத்தில் நடத்தினார்கள். அந்த விழாவில் பத்திரிகையாளர் ஒருவர் நாக சவுர்யாவிடம், படத்தில் அவரது வேடம் குறித்து ஒரு கேள்வியை கேட்டார். அப்போது நாக சவுர்யாவுக்கு பதிலாக படத்தின் இயக்குனர் பவன் பசம் ஷெட்டி விளக்கம் கொடுத்தார். ஆனால் அவரது பதிலால் திருப்தி அடையாத அந்த நிருபர், நாக சவுர்யாவிடம் அதே கேள்வியை திரும்ப கேட்டார். கோபத்துடன் காணப்பட்ட நாக சவுர்யா, அதற்கு பதிலளித்தார். அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே படக்கென கும்பிடு போட்டு விட்டு எழுந்து வெளியேறினார். நாக சவுர்யாவின் இந்த செயலால் பத்திரிகையாளர்கள், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

The post படத்தின் வெற்றி விழாவிலிருந்து வெளியேறிய ஹீரோ: படக்குழு அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: