வில்லனான குழந்தை நட்சத்திரம்

ராசு மதுரவன் இயக்கிய ‘முத்துக்கு முத்தாக’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பைசல். பிறகு ‘செங்காடு’, ‘மூடுபனி’, ‘அன்புடன் அழகன்’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தைச் சேர்ந்த பைசல், பட்டப்படிப்பை முடித்துவிட்டு மும்பையிலுள்ள அகாடமியிலும், சென்னை கூத்துப்பட்டறையிலும் நடிப்புப் பயிற்சி பெற்றார். நடனம் மற்றும் சண்டைப் பயிற்சியும் பெற்றார். திரைக்கு வந்த ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் வில்லனாக அறிமுகமான அவர், ஹீரோ விக்ரம் பிரபுவின் தந்தையைக் கொன்று, அவருடன் மோதும் கொடூர வில்லனாக நடித்தார்.

இதையடுத்து ‘டாடி’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் பைசல் கூறுகையில், ‘சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. நடிப்பு, நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி பெற்றேன். நாடகங்களில் நடித்து என்னை மெருகேற்றிக்கொண்டேன். ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் வில்லனாகி இருக்கிறேன். தொடர்ந்து வில்லன் வாய்ப்பு வருகிறது. அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்து, ‘இயக்குனரின் நடிகன்’ என்று பெயரெடுக்க விரும்புகிறேன்’ என்றார்.

The post வில்லனான குழந்தை நட்சத்திரம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: