ஹீரோவை நினைத்து பதற்றம்: ராஷ்மிகா சொல்கிறார்

ஐதராபாத்: அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை இயக்கியவர் சந்தீப் வங்கா. இவர் அதே படத்தை இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் இயக்கினார். இந்தியிலும் படம் ஹிட்டானது. இப்போது ‘அனிமல்’ படத்தை ரன்பீர் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார். படம் பான் இந்தியா முறையில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி தியேட்டர்களில் திரைக்கு வர உள்ளது. ராஷ்மிகா மந்தனாவுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘நேற்று இரவு ‘அனிமல்’ பட ஷூட்டிங் முடித்து விட்டு ஐதராபாத் திரும்பவிட்டேன். ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டேன்.

‘அனிமல்’ படத்தில் நடித்தது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்பதை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குழுவுடன் பணியாற்றவேண்டும் என்பது நான் விரும்பிய விஷயமாகும். 50 நாட்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஆனால், ஏதோ ஒரு பெரிய வெற்றிடத்தை உணர ஆரம்பித்திருக்கிறேன். ரன்பீர் கபூருடன் பணியாற்றுப்போகிறேன் என நினைத்த போது பதற்றமாக இருந்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். இந்த படப்பிடிப்பை என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய படக்குழுவுக்கு நன்றிகள்’ என ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.

The post ஹீரோவை நினைத்து பதற்றம்: ராஷ்மிகா சொல்கிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: